Skip to main content

Posts

Showing posts from May, 2019

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை அமுல்!!!

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறைகளை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அமுல்படுத்தியுள்ளது. கடவுச்சீட்டு கட்டணம் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய நாளை முதல் புதிய கட்டணம் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செயற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய சாதாரண சேவை 3500 ரூபாவாகவும் ஒரு நாள் சேவை 15000 ரூபாவாகவும் அமுல்படுத்தப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது சாதாரண சேவை 3000 ரூபாவாகவும் ஒரு நாள் சேவை 10000 ரூபாவாகவும் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

🕉🕉சிவ பெருமானை நேரில் கண்ட ஆங்கிலேயர்!!🕉🕉

யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது இறைவனை நேரில் கண்ட ஆங்கிலேயர் பற்றிய இந்த நிகழ்வினை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்குமென இதை இங்கே பதிவு செய்கிறேன். 1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்திய இருந்தது.ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்த்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்திகொண்டிருந்தார். கர்னல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம் ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது மேலும் கர்னிலிடமிருந்து எந்த கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை. கர்னலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார், ஒரு நாள் உலவ குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது, அந்த கோவிலின் உள்ளிருந்து ஒலித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களை கண்டார். துயருற்ற முகத்தை கண்ட வேதியர்கள் காரணத்தை கேட்ட பிறகு வேதியர்கள் சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து அருள் புரி...

உலகக் கிண்ணத் திருவிழா இன்று ஆரம்பம்!!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, 2019ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (30) இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. 10 அணிகள் பங்குபற்றும் 2019ஆம் ஆண்டு உலக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடர் ஜூலை 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசை அடிப்படையில் இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன. மேலும், மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி சுற்றுமூலம் இந்தத் தொடரில் நுழைந்துள்ளன. இத்தொடரின் அரையிறுதிப் போட்டி ஜுலை 9ஆம் திகதியும் 2ஆவது அரையிறுதிப் போட்டி ஜுலை 11ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. அத்தோடு இறுதிப் போட்டி ஜுலை 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வுகள் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தும் – டு பிளிசிஸ் தலைமையிலான தென்னாபிரிக்கா அணிகளும் ம...

யார் இந்த கான்ட்ராக்ட்டர் நேசமணி ??????

நேசமணி, காரைக்குடி பக்கத்தில் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் பிறப்பு சாதாரணமானது கிடையாது. பிறக்கும் முன்பே ஒரு பேனில்லாமல், ஏசி இல்லாமல், திரும்பக்கூட இடமில்லாமல் வயிற்றில் பாடுபட்டு பிறந்தவர் நேசமணி. சிறு வயதிலேயே தன் அண்ணனை விட்டு பிரிந்த நேசமணி பல வருடங்கள் கழித்தே தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டார். தன் அத்தை பெண் திவ்யாவை மனப்பூர்வமாக காதலித்தார் நேசமணி. அந்த காதல் கைகூடாதபோதும் கூட 'நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப்போற. நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கப்போறேன்' என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தவர் நேசமணி. வெறும் ஏரியா கவுன்சிலராக இருந்து சட்டம் படித்து வக்கீல் வண்டுமுருகனாகி, லண்டனில் வக்கீலாக வேலை செய்தாலும் நேசமணிக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவில்லை. மீண்டும் குற்றாலத்தில் வந்து ஒரு டிவிஎஸ் 50 வாங்கிக்கொண்டு கடலைமிட்டாய் வாங்கித்தின்பதோடு சரி என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் நேசமணி. இப்படி இருந்தபோது தமிழ்நாடு போலீஸ் அவரை கைது செய்து கொரில்லா செல்லில் அடைத்தது. அதிலிருந்து ஹெல்மேட்டோடு ஒரு ஆட்டோவில் தப்பி வந்து மீன் வியாபாரம் செ...

ஓம் வடிவம்!!!! வியப்பில் விஞ்ஞானிகள்!!!!

முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம். ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள். தமிழ் கடவுளான முருகனின் 17 முக்கிய திருத்தலங்களை இன்று நாம் கூகிள் மேப் வழியாக ஒன்றிணைத்து ஏரியல் வியூவில் பார்த்தல் அது ஓம் வடிவில் தெரிகிறது. அனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, எந்த ஒரு அதி நவீன தொழில் நுட்பமும் இல்லாமல், காட்டிடக்கலையில் இப்படி ஒரு அறிவியல் புரட்சியை ஆதி தமிழன் எப்படி நிகழ்த்தி காட்டினான் என்பது புரியாத புதிராகவே உள்ளது. கர்நாடகாவில் தொடங்கி கேரளாவில் முடியும் இந்த ஓம் வடிவ திருத்தலங்களில் 14 திருத்தலங்கள் தமிழகத்திலும், 2 கர்நாடகாவிலும், 1 கேரளாவிலும் அமைந்துள்ளது. அந்த திருத்தலங்களின் பெயர்கள் இதோ. 1. திருப்பரங்குன்றம் 2. திருச்செந்தூர் 3. பழநி 4. சுவாமிமலை 5. திருத்தணி 6. சோலைமலை (பழமுதிர்ச்சோலை) 7. மருதமலை 8. வடபழனி (சென்னை) 9. வைத்தீஸ்வரன்கோவில்    முத்துக்குமாரசுவாமி 10. நாகப்பட்டினம் சிக்கல் 11. திருச்சி வயலூர் 12. ஈரோடு சென்னிமலை 13. கோபி பச்சமலை 14. கரூர் வெண்ணைமலை 15. கர்நாடகா குக்கே சுப்ரமண்யா 16. கர்நாடகா கட்டி சுப்ரமண்யா 17. கேரளா ஹரிப்பாடு...

சந்தோஷமாக வாழ்வது எப்படி!!!

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள். 2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள். 3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள். 4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள். 6.  அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான  புத்தகங்களை படியுங்கள். 7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள்  வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும். 8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள். 9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது! 10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே  நிறைய உண்ணுங்கள். 11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள். 12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள். 13. உங்களுக்குள் உன்னதம...

அம்பாறை தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு புதிய பணிப்பாளராக சதாசிவம் தியாகராசா நியமனம்

அம்பாறை காடி தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு புதிய பணிப்பாளராக மட்டக்களப்பு – களுதாவளையினைச் சேர்ந்த சதாசிவம். தியாகராசா பொதுச் சேவை ஆணைக் குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று. முகாமைத்துவ பட்டத்தினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும், கல்வியில் பட்ட மேற்படிப்பினை திறந்த பல்கலைக்கழகத்திலும், முகாமைத்துவத்தில் பட்ட மேற்படிப்பினையும், முகாமைத்துவத்தில் முதுமானியினை (MBA) ரஜரட்ட பல்கலைக் கழகத்திலும் பெற்றார். 1994ஆம் ஆண்டு முதல் 2011 வரை மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராக கடமையாற்றி, அதே நேரம், 1994- 1998  வரை இலங்கை உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் ஆறு வருட காலம் கல்வி இணைப்பாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மாணவர்கள் உயர் தொழில்நுட்ப கணக்கியல் டிப்ளோமா, தேசிய ஆங்கில டிப்ளோமா (HNDA. NDE) கல்வி பயின்று தொழில் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்கள். 2010 – 2011 வரை சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் இரண்டு வருடகாலம் கடமையாற்றினார். மீண்டும், மட்டக்களப்பு தொழில்நு...

ஹெட் போன் பயன்பாட்டை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

இன்றைய உலகில் பெரும்பாலும் ஹெட்போன் உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது, அதேபோல மார்க்கெட்டிலும் அதிகமான நிறுவனங்களும் ஹெட் போன்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, தங்களின் பொழுதுபோக்கிற்காக விளையாட்டாக பயன்படுத்தும் ஹெட் போன்களினால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை யாரும் உணர்வதில்லை நாளடைவில் தான் அதன் பாதிப்பை உணர்கின்றனர். நமது காதுகளால் 65 டெசிபெல் வரை ஒரு ஒலியை தாங்க முடிகிறது, ஆனால் நாம் பயன்படுத்தும் ஹெட் போனின் ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும். அதாவது 100 டெசிபெல் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேல் நாம் ஹெட் போனில் ஒலியை கேட்டால், நாம் காது கேளாத நிலையை அடைந்துவிடும். நாம் ஹெட்போன் பயன்படுத்துவதினால் நம் காதுகளில் உள்ள செல்களின் மீது மிகவும் தவறான தாக்கத்தை எதிர்கொள்கிறோம். ஹெட்போனை தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை நாம் உபயோகிப்பதால் நம் காதுகளில் உள்ள செல்கள் சிதைகின்றனர், அதே போல வேகமாக பாக்டீரியாக்கழும் தோன்றுகின்றது. ஹெட்போன் பயன்படுத்துவதினால் தலைவலி, தூக்கமின்மை, மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் நாம் பாதிப்படைகின்றோம், நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்...

பாடசாலைகளுக்கு புதிதாக சேரவுள்ள மாணவ செல்வங்களுக்கு வெளிவந்தது விண்ணப்பபடிவம்

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு புதிதாக பாடசாலைக்கு சேரவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பபடிவத்தை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரத்தை பரீட்சைகள் திணைக்களத்தின் www.moe.gov.lk என்ற இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் பத்திரிகைகளுக்கான விளம்பரங்கள் நாளையதினம் வெளிவருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கோரிக்கையை நிராகரித்த மஹேல!

ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை அணிக்காக ஏதாவது வகையில் பங்களிப்பினை மேற்கொள்ள வருமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அழைப்பினை மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராகவிருந்து அணியை சிறப்பாக வழிநடத்தி கிண்ணத்தை பெற்றுக் கொடுத்தார். இந் நிலையில் இலங்கையின் கிரிக்கெட்டை துறையை மேம்படுத்த ஜயவர்த்தன உள்ளிட்டோர் சமர்ப்பித்த அறிக்கையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கருத்திற்கொள்ளவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த ஜயவர்த்தன, ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடருக்கு ஏதாவது வகையில் பங்களிப்பினை ஆற்ற வருமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அழைப்பினை தட்டிக்கழித்துள்ளார்.

புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து மீள்வது எப்படி?

கேள்வி: எனக்கு 30 வயது. புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டேன். அதிலிருந்து மீள எவ்வளவு முயற்சித்தாலும் முடியவில்லை. இதற்கு என்ன செய்யலாம்? பதில்:- உங்கள் கேள்வியில் உள்ள இரண்டு விடயங்கள் முயற்சி  வெற்றி பெறும் என்பதற்கு சான்றாக இருப்பதாக நான் நினைக்கிறேன். முதலாவது புகைத்தலுக்கு அடிமையாகிவிட்டதாக நீங்களே உணர்ந்து அதிலிருந்து மீள வேண்டும் என தீர்மானித்ததாகும். புகைத்தலைக் கைவிடமுடியுமா என்ற அவநம்பிக்கையுடன் பலர் தயங்கிக் கொண்டிருக்கும் போது விடுபட வேண்டும் என்ற தீர்மானமானமானது நிச்சயம் நம்பிக்கை ஊட்டுவதாகும். உங்கள் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கான முதல் வெற்றி அதிலேயே நிச்சயமாகிவிட்டது. புகைத்தலிருந்து விடுபட வேண்டும் என்ற தீர்மானாமானது மீள்வதற்கான முதற்படி மட்டுமல்ல உங்கள் உடல் நலத்தை மேம்படுத்துவதை நோக்கிய முக்கிய அடி எனலாம். நீங்கள் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் வருடாந்தம் ஒரு மில்லியனுக்கு மேலானவர்கள் அத்தகைய முதலடியுடன் ஆரம்பித்தே புகைத்தலைக் கைவிடுகிறார்கள். இரண்டாவது விடயம் நீங்கள் பலமுறை முயன்றும் விடுபட முடியவில்லை என்பதாகும். நீங்கள் மட்டுமல்ல இன்னு...

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை நெறிமுறைகள்!

மனித மனம் ஆழ்கடல் போன்றது. இதில் அமைதி என்பது சில நாட்கள் நீடித்தாலும், கரையை தொட்டுச் செல்லும் அலைபோல் சில பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன. இன்பம் எனும் சொர்க்க வாசலில் பயணிப்பவர்கள் குழந்தைகள் மட்டுமே என்றால் அது மிகையாகாது. ஏனெனில் இந்த வாழ்க்கை ஆழ்கடல் பயணமல்லவா? அதில் துன்பமும், இன்பமும் மாறிமாறி வந்தால்தான் பயணம் இனிமையாக அமையும். வாழ்க்கையும் பூர்த்தியாகிறது. இந்த வாழ்க்கை பற்றி வேதங்களும் புராணங்களும் பல விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தாலும், அதன் உண்மைத்தன்மையை பகவத்கீதையைவிட வேறொன்று சிறப்பாக கூறிவிடமுடியாது என்பதே எண்ணப்பாடு. வாழ்க்கை பற்றி பகவத் கீதை கூறும்போது, வாழ்க்கை என்பது சூரியன் அல்ல என்றும் அது நிலா போன்றது என்றும் அதில் வளர்பிறை தேய்பிறை என அனைத்தும் இருக்கும் என்றும், ஒருநாள் அது மறைந்தே போகும் என்றும் கூறியுள்ளது. மனிதன் இவ்வுலகில் பிறந்தது முதல் அவன் இறக்கும்வரை அனுபவிக்கும் அத்தனை விடயங்களையும் தெளிவுபடுத்துகிறது.அவ்வாறே மனித மனம் இலகுவில் அன்புக்கு அடிமையாவதும் அது பொய்யென அறியும்போது துவண்டுவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. உங்கள் அன்பு எங்கு நிராகரிக்கப்...

ஆஸ்துமா நோயை அடித்து விரட்டும் அற்புத மருந்து!!!

ஆஸ்துமா நோயை அடித்து விரட்டும் அற்புத மருந்து. சில நோய்களுக்கு மருத்துவம் என்பது எம் கையில் இருந்தாலும் அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை இதற்கான காரணம் இலகுவில் கிடைப்பவை நன்மை கொடுக்காது என்ற எமது எண்ணம் தான். ஆனால் இயற்கையாக கிடைக்கும் அனைத்திலும் ஏராளமான நன்மைகள் உண்டு வாங்க இன்றும் இயற்கை மருத்துவத்தை பார்க்கலாம்..! வில்வம் மரத்தின் காய், இலை, பழம், போன்றவற்றின் நோய் தீர்க்கும் நன்மைகள் பார்க்கலாம். கண் சிவப்பு தீர் வில்வம் இள இலைகளை எடுத்து சட்டியில் வதக்கு துணி ஒன்றில் சுற்றி வெதுவெதுப்பான சூட்டுடன் கண்களில் ஒத்தடம் கொடுங்கள் கண்களில் கண் சிவப்பு நீங்குவதுடன் கண்களுக்கு பதிப்பும் ஏற்படாது. தொடர்ந்து ஆஸ்துமா பிரச்சனை இருந்தால் வில்வம் இலைகள் 5 எடுத்து இரண்டு கப் நீர் ஒரு கப் ஆகும் வரை கொதிக்க வைத்து அதை ஒவ்வொரு நாளும் காலையில் வடிகட்டி குடித்துவர ஆஸ்துமா நோய் நீங்கும்..இது மலச்சிக்கல் போன்றவற்றிக்கும் பயனளிக்கும். வில்வம் பழம் பலம் வாய்ந்தது ஆனால் சீசனுக்கு தான் காய்க்கும் அதனால் கிடைக்கும் போது சாப்பிட்டு வாருங்கள் இதனால் கண் சம்மந்தப் பட்ட நோய்கள் மட்டும் இன்றி உடல் ஆரோ...

இரண்டு வாரங்களில் பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி.

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தத் தடவை பல்கலைக்கழக அனுமதிக்காக 70,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம். குணரத்ன குறிப்பிட்டுள்ளார். இவர்களில் 31,000க்கும் அதிகமானோரை பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழரின் பண்டைய சத்திரசிகிச்சை முறைகள்.

சித்த மருத்துவராகிய எனது பெயரின் பின்னால் இருக்கும் (B.S.M.S) என்று பட்டத்தின் விரிவாக்கம் எத்தனை பேருக்குத் தெரியுமோ? (Bachelor of Siddha Medicine and Surgery) அதாவது சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான பட்டம். அப்படியானால் சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா? இதற்கான பதிலை கடைசியில் கூறுகிறேன். அதற்கு முன் சில விசயங்களைப் பார்ப்போம். அறுவை சிகிச்சை என்றாலே அதற்கு நேர்த்தியான கருவிகள் வேண்டும். சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் கருவிகளின் பெயர்களையும், அதன் வடிவங்களையும் சுருக்கமாகப் பார்ப்போமா? ‘அகத்தியர் நயன விதி’ என்ற புத்தகத்தில் மட்டும் கூறப்பட்ட 26 வகையான கருவிகளை ஒரு அறிமுகத்திற்காக குறிப்பிடுகிறேன். கத்தி சத்திரம் கவின்குறும்பி வாங்கியும் முக்கவா தன்னுடன் முள்ளு வாங்கியும் ஆழிக் கோலு மடுத்த பிறையுடன் கத்திரிக் கையுடன் பரகரை வாங்கியும் முச்சலா கையோடு முனிமொழி யோட்டும் மட்டக் கோலும் மாறும் ஊசியும் செப்புக் கிழையுஞ் சீரிய சலாகையும் வட்டகை தன்னுடன் வளர்பஞ் சமுகமும் செப்புச் சலாகையுங் கொம்புங் குடோரியும் வெங்கலக் குழல...

ஒரு பாடசாலையும் 3 கிரிக்கெட் வீீரர்களும்.

St. Josephs கல்லூரியில் கிட்டதட்ட ஒரே காலப் பகுதியில் கல்வி கற்றவர்கள் தான் இந்த Angelo Mathews, Dimuth Karunaratne, Thisara Perera. AL batch Mathews 2006, Dimuth 2007 Thisara 2008. மூவரும் பாடசாலைக் காலம் முதலே எத்தனையோ  அணிகளில் சேர்ந்து5 விளையாடியிருக்கின்றார்கள். Angelo Mathews பாடசாலைக் காலத்தில் விளையாடும் போதே இலங்கை கிரிக்கெட் தெரிவாளர்கள் வரையில் பிரபலம் பெற்றுவிட்டார். Under 16 இருக்கும் போதே under 19 worldcup விளையாடியவர்.  ஒரு கட்டத்தில் Angie தலைமை தாங்கிய under 19 அணியின் opener Dimuth. பின் Dimuth தலைமையுடன் opening batting இலும் விளாசித்தள்ள உள்ளூர்க் கழகங்கள் குறி வைக்கின்றன. கழக உறுப்பினர்கள் சிறந்த வீரர்களை பாடசாலைக் காலத்திலேயே தம் கழகங்களில் சேர்த்து விடுவதில் மும்முரமாக இருந்தனர். Dimuth க்கு அப்போதைய number one club SSCயில் வாய்ப்பு கிடைக்க, Mathews ஐயும் Perera வையும் st Joseph இன் இன்னொரு முன்னாள் மாணவர் Chaminda Vaas, Colts club இல் இணைக்கின்றார். 2008, 2009 களில் முறையே Mathews ம் ஜ Perera வும் இலங்கை அணிக்குள் வந்து கலக்க ஆரம்பிக்க, Dimuth ...

நேர அட்டவணை கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர)ப் பரீட்சை - 2019 ஓகஸ்ட்

நேர அட்டவணை கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர)ப் பரீட்சை - 2019 ஓகஸ்ட் புதிய பாடத்திட்டம்   New Syllables  பழைய பாடத்திட்டம் Old  Syllables

மேலும் 8 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க திட்டம்

மேலும் 8 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க திட்டமிப்பட்டுள்ளது. செயற்திட்ட உதவியாளர்களாக பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. தெரிவுசெய்யப்படும் பட்டதாரிகள் ஒருவருட பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர். அவர்களுக்கு பயிற்சி காலத்தின் போது 20 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படுமென தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

government gazatte இன்றைய (24.05.2019) வர்த்தமானியில்!

01. பதிவாளர் நாயகம் திணைக்களம் முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி - கேகாலை மாவட்டம் 02. நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சு நிறைவேற்றதிகார சேவைத் தரத்தில் சட்டத்துறை உத்தியோகத்தர் பதவிக்காக திறந்த போட்டி அடிப்படையில் ஆட்சேர்த்தல் 03. உள்ளக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் மாவட்டச் செயலகங்கள்/ அரசாங்க அதிபர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கான தாக்சண சகாயக பதவியின் IIIஆந் தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019 04. இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் IIIஆம் தரம் மற்றும் IIஆம் தரத்தினையுடைய அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2017 (II) (2019) 05. சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு இலங்கைத் தொழில்நுட்ப சேவைக்குரிய மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பம் அல்லாத/ தொழில்நுட்ப சேவை வகையின் (MN 3-2006A) பொது சுகாதார கள உத்தியோகத்தர் பதவிக்கான (திறந்த அடிப்படையில்) பயிற்சிக்கு மாணவர்களை ஆட்சேர்த்தல் - 2019 06. தேசிய மொழிக்கல்வி...

ஆகஸ்ட் முதல் பலாலியிலிருந்து விமான சேவை

பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் உள்ளூர் விமான சேவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென மக்களைக் கவரும் வகையில் முதல் கட்டமாக  நிவாரண விலையில் விமான சேவை வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். முதற்கட்டப் பணிகளின் கீழ் விமான பயண சீட்டுக்கான கட்டணம் வருடம் முழுவதும் நிவாரண முறையில் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இரத்மலான விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு மத்தள, மட்டக்களப்பு, சீகிரிய, பலாலி ஊடாக கட்டுநாயக்க அல்லது இரத்மலான விமான நிலையம் வரை உள்ளக சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் அசோக அபேசிங்க மேலும் தெரிவித்தார்.

கோழி திருடியவர்களுக்கு மூன்று மாத சிறை!

கூண்டோடு கோழி திருடிய இருவருக்கு அபராத தொகை அறவிட்டதோடு மூன்று மாத கால சிறைத்தண்டனையும் விதித்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நாவற்குழி 300 வீட்டு திட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் கோழிக்கூட்டுடன் , கோழி , முட்டை என்பவற்றை  கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி திருடி சென்றனர். குறித்த சம்பவம்  தொடர்பாக வீட்டு உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நாவற்குழி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன் போது அவர்கள் தாமே திருடியதாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தனர். குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தினர். அதன் போது அவர்கள் , தாமே திருடியதாகவும் , திருடிய கோழிக்கூடு கோழிகள் , முட்டைகள் என்பவற்றை யாழ்ப்பாணத்தில் விற்று விட்டதாகவும் மன்றில் தெரிவித்தனர். அதனை அடுத்து அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம்  தீர்ப்பு...

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி அமைச்சு எடுக்கவுள்ள புதிய நடவடிக்கை…!

இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் சி.சி.ரி.வி கமெராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அரச பாடசாலைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், இத்திட்டத்திற்கான செலவீனங்களை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அசுறுத்தல் நிலைமைகளின் காரணமாகவே இந்த முடிவினை கல்வி அமைச்சு எடுத்துள்ளது.

விடுபட்ட பாடங்களை நிவர்த்தி செய்ய வேலைத்திட்டம்

நாட்டில் நிலவும் பாதுகாப்பு  நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் பூர்த்தி செய்ய முடியாமல் போன பாடங்களை நிவர்த்தி செய்வற்காக பாடசாலை மட்டத்தில் பொருத்தமான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு, பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. மேலும் தவணைப்பரீட்சையை எந்த நிலைமையிலும் ரத்துச்  செய்ய வேண்டாமெனவும் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.ரத்னாயக்க கேட்டுள்ளார். பாடவிதானங்களை நிவர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை வகுக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச தகவல் திணைக்களம்

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இன்றைய ராசிபலன்- வெள்ளிக்கிழமை, 24 மே 2019

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள். மேஷம் :உடல் நலப் பிரச்சினை காரணமாக ஒரு முக்கியமான வேலையை முடிக்க உங்களால் போக முடியாது என்பதால் ஒரு பின்னடைவை சந்திப்பீர்கள். ஆனால் உங்களை முன்னெடுத்துச் செல்ல சரியான வழியை பயன்படுத்துங்கள். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். வீட்டில் நின்று போயிருந்த வேலைகளை முடிப்பீர்கள். அர்ப்பணிப்புள்ள மற்றும் கேள்விக்கு இடம் தராத காதலுக்கு ஒரு மந்திரம் நிறைந்த கிரியேட்டிவ் சக்தி உண்டு. பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல நாள். பிசினஸ் நிமித்தம் மேற்கொண்ட திடீர் பயணத்துக்கு பாசிடிவான ரிசல்ட் கிடைக்கும். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். உங்கள் துணை உண்மையிலேயே ஒரு தேவதை தான். அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். ரிஷபம்: சீக்கிரம் அலுவலகத்தை ...

பாடசாலை பாதுகாப்பு (CCTV) மற்றும் தவனைப் பரீட்சை இறுதி தீர்மாணம் - அகில

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் சி.சி.ரி.வி கமெராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அத்தோடு, பாடசாலைகளில் தவணை சோதனைகளை இரத்துச் செய்வதற்கான எந்தவித திட்டமும் இல்லை என்பதோடு, வழமை போன்று க.பொ.த. சாதாரணதர, உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார். பரீட்சைகளை ஒத்திப்போடுவதால், ஏனைய சிக்கல்களுக்கு வழிவகுக்கும் எனவும், அவர் சுட்டிக்காட்டினார். அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கப் பாடசாலைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், இத்திட்டத்திற்கான செலவீனங்களை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும், அவர் தெரிவித்தார். மேலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்ட காலப்பகுதிக்கு ஈடுசெய்யும் வகையில், ஓகஸ்ட் மாத விடுமுறையை இரத்துச் செய்வதா என்பது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், அவர் தெரிவித்தார்.

அதிபர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள வேண்டுகோள்

பாதுகாப்புக் காரணங்களால் பாடசாலைகள் மூடப்பட்டபோது தவறவிடப்பட்டிருந்த கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு, அதிபர்களை அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, எக்காரணத்திற்காகவும் தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது என அமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதனால் தவறவிடப்பட்ட கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தத் தடவை தவணைப் பரீட்சைகள் நடாத்தப்படுமா என பலர் வினவுவதாக சுட்டிக்காட்டியுள்ள M.M. ரத்னாயக்க, தவணைப் பரீட்சைகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை வழமைபோன்று இடம்பெறும் எனக் கூறியுள்ளார்.

இன்றைய ராசிபலன் – 23-05-2019

மேஷம் மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத் தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம் ரிஷபம்: பிற்பகல் 1.30 மணிவரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். உங்களின்அணுகுமுறையை மாற்றுங்கள்.வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில்விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள்உடைபடும் நாள். மிதுனம் மிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல் நிலை சீராகும்.மனைவிவழியில் எதிர்பார்த்தஉதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில்லாபம் வரும்.உத்யோகத்தில் மேலதிகாரிஆதரிப்பார். பிற்பகல் 1.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள். கடகம் கடகம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட...

அவசரகால சட்ட ஏற்பாடுகள் நீடிப்பு: அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்ட ஏற்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி இன்று வௌியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தொடர்ந்தும் அவசரகால சட்ட ஏற்பாடுகள் அமுலில் இருக்கும் என குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு: சுற்றறிக்கை வௌியீடு

அரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான முன்மொழிவு செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இடைக்கால கொடுப்பனவிற்கான சுற்றறிக்கை தொடர்பில் திறைசேரியின் அனுமதியுடன் பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சினூடாக அனைத்து அமைச்சுகளினதும் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சுற்றறிக்கையூடாக அரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், மாதாந்தம் வழங்கப்படும் 7800 ரூபா வாழ்க்கை செலவிற்கான கொடுப்பனவு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

22.05.19- இன்றைய ராசி பலன்..(22.05.2019)

மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப்போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள். மிதுனம்:பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சகஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நன்மை கிட்டும் நாள். கடகம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். ...

2019.05.12 .றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழக RPL போட்டியில் டா டேவேல் அணியினர் வெற்றி

தம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் திருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்கள், விளையாட்டு வீரர்களுக்கு இடையே ஒற்றுமையையும் மற்றும் பலத்தினையும் ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும்   அணிக்கு பதினொருவர்(11) கொண்ட, எட்டு (8) அணிகளுக்கான றேஞ்சர்ஸ் பிரிமியர் லீக் சுற்று போட்டியின் [RPL கிரிக்கெட் சுற்றுப் போட்டி RPL-2019 (SEASON-IX)] 9வது போட்டி நிகழ்வானது கடந்த 19.04.2018 வெள்ளிக்கிழமை  அன்று தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நைட் ரைடர்ஸ், கிங் இலவன்,கிங் கோப்ரா, ரோயல் செலன்சஸ், டா டேவேல்,  சன் ரைசஸ், டெகான் சார்ஜர்ஸ், சூப்பர் கிங்க்ஸ் ஆகிய அணிகள் பங்கு பற்றின. இவ்வாறாக ஆறு நாட்கள் போட்டிகள் நடைபெற்றது.  இறுதி போட்டி நிகழ்வு  12.05.2018 ஞாயிற்றுக்கிழமை நேற்றையதினம் இடம்பெற்றது . இவ் இறுதி போட்டியில் டெகான் சார்ஜர்ஸ் அணியும் மற்றும் டா டேவேல்  அணியும் மோதின, இப்போட்டியில் டா டேவேல் அணியினர் வெற்றிவாகை சூடினர். இதற்காக வெற்றி கிண்ணங்களை அதிதிகள் இணைத்...