கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, 2019ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (30) இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.
10 அணிகள் பங்குபற்றும் 2019ஆம் ஆண்டு உலக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடர் ஜூலை 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசை அடிப்படையில் இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன. மேலும், மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி சுற்றுமூலம் இந்தத் தொடரில் நுழைந்துள்ளன.
இத்தொடரின் அரையிறுதிப் போட்டி ஜுலை 9ஆம் திகதியும் 2ஆவது அரையிறுதிப் போட்டி ஜுலை 11ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. அத்தோடு இறுதிப் போட்டி ஜுலை 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வுகள் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முதல் போட்டியில், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தும் – டு பிளிசிஸ் தலைமையிலான தென்னாபிரிக்கா அணிகளும் மோதிக்கொள்ளவுள்ளன.
இந்த இரண்டு அணிகளும் சம பலம் பொருந்தியவை என்பதால் உலகக்கிண்ண முதல் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தமுறை உலகக் கிண்ணத்தின் மொத்த பரிசுத் தொகை 10 மில்லியன்களாகும்.
இதில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் வழங்கப்படவுள்ளது (இலங்கை ரூபாவில் 70 கோடி). உலகக் கிண்ண வரலாற்றில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு வழங்கப்படுகின்ற மிகப்பெரிய பரிசுத் தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் வழங்கப்படவுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் சம்பியன் பட்டம் வென்ற அவுஸ்திரேலிய அணிக்கு 3.75 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. அதன்படி, இம்முறை பரிசுத் தொகை 250,000 அமெரிக்கா டொலர்கள் அதிகமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், அரையிறுதியில் தோல்வியடையும் இரண்டு அணிகளுக்கும் தலா 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன.
இதேநேரம், லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் 40,000 அமெரிக்க டொலர்களும், எந்தவொரு போட்டியிலும் வெற்றிபெறாது வெளியேறும் அணிக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளது.
கிரிக்கெட் உலகில் 5 முன்னணி வீரர்காளான இந்திய அணியின் தோனி, மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கிறிஸ்கெய்ல், நியூஸிலாந்து அணியின் ரோஷ் டெய்லர், தென்னாபிரிக்க அணியின் ஸ்டெய்ன், ஹசிம் அம்லா மற்றும் இலங்கை அணியின் லசித் மாலிங்க ஆகியோர் இறுதியாக விளையாடும் உலகக் கிண்ணத் தொடர் இதுவாகும்.
1975ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உலகக் கிண்ணத் தொடரில், அவுஸ்ரேலியா 5 முறையும் மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா அணிகள் தலா 2 முறையும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியா – 1987, 1999, 2003, 2007, 2015
மேற்கிந்தியத்தீவுகள் அணி – 1975, 1979
இந்திய அணி – 1983, 2011
இலங்கை – 1996
முழு போட்டி அட்டவணை:


Comments
Post a Comment