Skip to main content

Posts

SENIOR ENGINEER – MINISTRY OF AGRICULTURE

Recent posts

ஏழ்மை கல்விக்கு தடையல்ல - வாழ்வினில் கல்வியினூடாக பல சாதனைகள் செய்திட வாழ்த்துக்கள் சகோதரி!!!

கடந்த வருடம் க.பொ.த சாதரன தர பரீட்சையில் 6 பாடங்களில் அதி உயர் சித்திகளை (6ஏ) பெற்ற #தாண்டியடி விக்ணேஸ்வரா மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தமது குடும்ப சூழல் காரணமாக உயர் தர வகுப்புக்களுக்கான கட்டணங்களை செலுத்துவதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார். கல்வியில் திறமையும் ஆர்வமும் உடைய இம்மாணவிக்கு உதவும் முகமாக பொத்துவில் ஊறணியை சேரந்த சேவியர்_குரேரா பிறின்டன்_குரேரா அவர்கள் ரூ 25,000/- ஐ நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார் (இவர் ஏற்கனவே மர நடுகைக்காக ரூ 5,000/- நன்கொடை வழங்கியிருந்தார் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது)  வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏👏👏 இவருடைய நன்கொடையில் இந்துசமயம்,அரசியல்,தமிழ் ஆகிய பாடங்களுக்கான அடுத்து வரும் 2-3 மாதங்களுக்கான வகுப்பு கட்டணங்களும், நிரந்தர வாழ்வாதார உதவியாக ஒரு கோழிக்கூடு மற்றும் நாட்டுக்கோழிகளும் (10 பேடு, 2 சேவல்) வழங்கப்பட்டன.  இம்மாணவியின் கல்வி அடைவுமட்டங்களை பாடசாலை அதிபர் அவர்களால் நேரடி கண்கானிப்பில் அவதானிக்கபடும் என அதிபர் அவர்களே அக்கறை கொண்டு கூறியது கூடுதல் மகிழ்ச்சி. 👍🏻👌 நன்கொடையாளருக்கும் இதனை சரியாக...

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது. பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா... என்னோடு நான் அழுகின்றேனா... இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது. சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும் உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம் கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன். என் அழுகைக்கான காரணத்தை அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை... இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான் எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ எனக்கே தெரியாது. அழுகையின் தொடக்கமும் முடிவும் அழுகையாகவே மட்டும் இருக்கிறது. கிடைக்கும் தனிமைகளை எல்லாம் அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன். அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின் மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன். அழாத நாட்கள் என்று ஒன்றமே என்னை கடந்ததாக இல்லை... அழுகையை விட ஒரு நண்பன் இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை... அழுவதற்கென்று குளியல் அறையினையே நான் அதிகம் பயன்படுத்துகின்றேன். யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும் எனக்கு பயமில்லை... எனது அழுகையினை எனது குளியல் ஒருபோதும் காட்டியே க...

இந்தியாவிடம் சரணடைந்த மே.இ.தீவுகள்: தோல்வியே பெறாத ஒரே அணியாக இந்தியா!!!

இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று மான்செஸ்டர் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 34வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது விராத் கோஹ்லி, தோனி, பாண்ட்யா அதிரடியில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 268 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 269 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மே.இ.தீவுகள் அணி,  34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து  143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி அடைந்துள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு தோல்வி கூட இல்லாமல் வெற்றி நடைபோடும் ஒரே அணியாக இந்தியா உள்ளது. இன்றைய வெற்றியால் இந்திய அணி 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்திய அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் இருப்பதால் இன்னும் ஒரு போட்டியில் வென்றாலே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவை எங்களால் வெல்ல முடியும் – ஷகிப் உல் ஹசன் சவால் !

பங்களாதேஷ் அணியின் ஷகீப் உல் ஹசன் இந்தியாவைத் தங்கள் அணியால் வெல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. வலிமை மிக்க தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வென்று அவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இந்நிலையில் அந்த அணிக்கு அடுத்து வரும் இரண்டு போட்டிகள் மிக முக்கியமானவை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறி செல்ல முடியும். ஆப்கானிஸ்தான் அணியோடு நடந்த போட்டியில் வெற்றி பெற்ற பின் அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் உல் ஹசன் செய்தியாளர்களிடம் பேசிய போது ‘இந்தியா இதுவரை எந்தப் போட்டிகளிலும் தோல்வி அடையாமல் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளது. இந்தியாவை எங்களால் எளிதாக வெல்ல முடியாது என எனக்குத் தெரியும். ஆனால் நாங்கள் எங்கள் சிறப்பான பங்களிப்பை அளிப்போம். இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த சில வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றுவோம்’ எனக் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு 3வது தோல்வி: அரையிறுதிக்கு செல்லுமா?

கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணி இந்த தொடரில் மூன்றாவது தோல்வியை இன்று அடைந்துள்ளதால் இந்த அணி அரையிறுதிக்கு செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது இங்கிலாந்து அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகளை மட்டுமே வென்றுள்ளது. ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் மோதி தோல்வி அடைந்துள்ளது. இன்னும் இந்தியா, நியூசிலாந்து ஆகிய பலமான அணியுடன் மோதவேண்டிய நிலை உள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது அதே நேரத்தில் ஆறு வெற்றிகளை பெற்று 12 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலியா, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது   போட்டியின் ஸ்கோர் விபரம் ஆஸ்திரேலியா: 285/7  50 ஓவரக்ள் பின்ச்: 100 வார்னர்: 53 ஸ்மித்: 38 கார்ரே: 38 இங்கிலாந்து: 221/10  44.4 ஓவர்கள் ஸ்டோக்ஸ்: 89 பெயர்ஸ்டோ: 27 வோக்ஸ்: 26 ரஷித்: 25 ஆட்டநாயகன்: பின்ச்

கோஹ்லி, பூம்ராவுக்கு ஓய்வு – பிசிசிஐ அறிவிப்பு !!!

உலகக்கோப்பைப் போட்டிகளுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியோடு இந்தியா விளையாட இருக்கும் தொடரில் கோலி மற்றும் பூம்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய அணி இப்போது இங்கிலாந்தில் முகாமிட்டு உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி இதுவரை  ஒருத் தோல்வியைக் கூட சந்திக்கவில்லை என்பது நம்பிக்கையளிக்க கூடியதாக உள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் உலகக்கோப்பை முடிந்தவுடன்  இந்திய அணி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்று வெஸ்ட் இண்டீஸோடு நடக்கும் ஒரு நாள் தொடரில் கோஹ்லி மற்றும் பூம்ராவுக்கு ஓய்வளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பிறகு நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருவரும் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.