Skip to main content

சம்பியனானது விநாயகபுரம் விநாயகர் விளையாட்டு கழகம்!


அம்பாறை விநாயகபுரம் விநாயகர் விளையாட்டுக் கழகம் நடாத்திய சரவனை கந்தையா ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கேட் சுற்றுப் போட்டியில் விநாயகர் விளையாட்டு கழகம் சம்பியன் வெற்றிக் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டதுடன் இரண்டாம் இடத்திற்கு விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது.

இக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது கடந்த மாதம் 18ந் திகதி ஆரம்பமானது. இச் சுற்றுப்போட்டிக்கு ஆலையடிவேம்பு முதல் கோமாரி வரையான கிராமங்களைச் சேர்ந்த சுமார் 26 விளையாட்டுக் கழகங்கள்  பங்கு கொண்டன.

இறுதிச் சுற்றுக்கு விநாயகபுரம் மின்னொளி மற்றும் விநாயகபுரம் விநாயகர் ஆகிய இரு அணிகளும் தெரிவாகி இருந்தன.

இந்நிலையில் இச் சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்று நேற்று மாலை  விநாயகபுரம் மகாவித்தியாலய மைதானத்தின் விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் உபதலைவர் கை.கமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது விநாயகர் அணி முதலாவதாக ஆட்டத்தை ஆரம்பித்த விநாயகர் விளையாட்டு கழகம்  பத்து ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பக்கு எண்பத்திநான்கு ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதேவேளை பதிலுக்கு துடிப்பெடுத்தாடிய விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகம் 9:3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

பதினான்கு ஓட்ட வித்தியாசத்தில் விநாயகபுரம் மின்னொளி கழகத்தினை விநாயகபுரம் விநாயகர் கழகத்தினர் வெற்றி கொண்டதுடன், வெற்றிக் கிண்ணத்தையும் 20ஆயிரம் ரூபா பணப்பரிசினையும் தட்டிச் சென்றனர்

இச் சுற்றுப் போட்டியில் ஆட்ட நாயகனாக விநாயகர் கழகத்தினைச் சேர்ந்த, கே.கோபிநாத் மற்றும் ஜ.கவிதாஸ் ஆகியோர் தெரிவாகினர்.

தொடர் ஆட்டநாயகனாக தம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தினைச் சேர்ந்த ராஜீதன் தெரிவாகினார்.  இதனைத் தொடர்ந்து இச் சுற்றுப் போட்டிகள் அனைத்திலும் 14 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக விநாயகபுரம் விநாயகர் கழகத்தினைச் சேர்ந்த எம்.ஜீனோஜ் தெரிவாகினார்.

சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன், சபை உறுப்பினர்களான கே.காந்தரூபன், கே.கமல் மற்றும் திருக்கோவில் பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் ஜீ.விநாயகமூர்த்தி மற்றும் மதகுருமார்கள், வங்கி முகாமையாளர்கள், அனுசரனையாளர்கள்,  விளையாட்டு வீரர்கள்,  நிருவாகிகள் மற்றும் பார்வையாளர்கள் என பலரும் கலந்த கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது. பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா... என்னோடு நான் அழுகின்றேனா... இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது. சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும் உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம் கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன். என் அழுகைக்கான காரணத்தை அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை... இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான் எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ எனக்கே தெரியாது. அழுகையின் தொடக்கமும் முடிவும் அழுகையாகவே மட்டும் இருக்கிறது. கிடைக்கும் தனிமைகளை எல்லாம் அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன். அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின் மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன். அழாத நாட்கள் என்று ஒன்றமே என்னை கடந்ததாக இல்லை... அழுகையை விட ஒரு நண்பன் இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை... அழுவதற்கென்று குளியல் அறையினையே நான் அதிகம் பயன்படுத்துகின்றேன். யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும் எனக்கு பயமில்லை... எனது அழுகையினை எனது குளியல் ஒருபோதும் காட்டியே க...

ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, முகமது நபி உள்பட மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்தார். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷமிக்கு கிடைத்துள்ளது ஸ்கோர் விபரம்: இந்தியா: 224/8  50 ஓவரகள் விராத் கோஹ்லி: 67 கேதார் ஜாதவ்: 52 கே.எல்.ராகுல்: 30 விஜய் சங்கர்: 29 தோனி: 28 ஆப்கானிஸ்தான்: 213/10  49.5 ஓவர்கள் முகமது நபி: 52 ரஹ்மத் ஷா: 36 குல்பதின் நப்: 27 ஜாட்ரான்: 21 ஆட்டநாயகன்: பும்ரா இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஸ்கோர் விபரம்: நியூசிலாந்து: 291/8  50 ஓவர்கள்

ஏழ்மை கல்விக்கு தடையல்ல - வாழ்வினில் கல்வியினூடாக பல சாதனைகள் செய்திட வாழ்த்துக்கள் சகோதரி!!!

கடந்த வருடம் க.பொ.த சாதரன தர பரீட்சையில் 6 பாடங்களில் அதி உயர் சித்திகளை (6ஏ) பெற்ற #தாண்டியடி விக்ணேஸ்வரா மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தமது குடும்ப சூழல் காரணமாக உயர் தர வகுப்புக்களுக்கான கட்டணங்களை செலுத்துவதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார். கல்வியில் திறமையும் ஆர்வமும் உடைய இம்மாணவிக்கு உதவும் முகமாக பொத்துவில் ஊறணியை சேரந்த சேவியர்_குரேரா பிறின்டன்_குரேரா அவர்கள் ரூ 25,000/- ஐ நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார் (இவர் ஏற்கனவே மர நடுகைக்காக ரூ 5,000/- நன்கொடை வழங்கியிருந்தார் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது)  வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏👏👏 இவருடைய நன்கொடையில் இந்துசமயம்,அரசியல்,தமிழ் ஆகிய பாடங்களுக்கான அடுத்து வரும் 2-3 மாதங்களுக்கான வகுப்பு கட்டணங்களும், நிரந்தர வாழ்வாதார உதவியாக ஒரு கோழிக்கூடு மற்றும் நாட்டுக்கோழிகளும் (10 பேடு, 2 சேவல்) வழங்கப்பட்டன.  இம்மாணவியின் கல்வி அடைவுமட்டங்களை பாடசாலை அதிபர் அவர்களால் நேரடி கண்கானிப்பில் அவதானிக்கபடும் என அதிபர் அவர்களே அக்கறை கொண்டு கூறியது கூடுதல் மகிழ்ச்சி. 👍🏻👌 நன்கொடையாளருக்கும் இதனை சரியாக...