Skip to main content

கண் சத்திரசிகிச்சை நவீன வசதிகளுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் மீண்டும் ஆரம்பம்!


3மாதங்களின் பின் மீண்டும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கண்சத்திரசிகிச்சைகள் ஆரம்பம்!


கல்முனை ஆதாரவைத்தியசாலையில்கடந்த மூன்று மாதங்களாக ஸ்தம்பிதமடைந்திருந்த கண்சத்திரசிகிச்சைகள் யாவும்  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன என்று வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

கண்சத்திரசிகிச்சைக்கூடம் கடந்த 3மாதங்களாக நவீனமயமாகப் புனரமைக்கப்பட்டுவந்ததே ஸ்தம்பிதநிலைக்கான காரணமாகும் என்றும் கூறினார். இனிமேல் கண்வில்லை பொருத்துதல் தொடக்கம் சகல கண்சத்திரசிக்சைகளும் கிரமமாக நடைபெறும்.

கண்வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி டாக்டர் எஸ்.பிரேம் ஆனந்தின் வருகையின்பின்னர் சத்திரசிகிச்சைகள் மிகவும் ஜருராகநடைபெற்றுவருகின்றன. கண்நோயாளர்களின் வருகையும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

இதேவேளை வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் டாக்டர்.எஸ்.பிரேம் ஆனந்தின்; வேண்டுகோளிற்கு இணங்க வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரனின் ஒருங்கிணைப்பின் பெயரில் லண்டனில் வாழும்  கண் வைத்திய நிபுணர்  திருமதி ராதா தர்மரெட்ணம் (லண்டன்) அவர்களினால் ரூபா 5 இலட்சம் பெறுமதியான மூக்குக் கண்ணாடி வில்லை மானி FOCI METER உட்பட மேலும் சில உபகரணங்களும் (EQUIPMENTS)  நேற்று வழங்கிவைக்கப்பட்டன.

கண் வைத்திய நிபுணர்  திருமதி ராதா தர்மரெட்ணம் (லண்டன்) அவர்களின் இந்த அன்பளிப்புப்பொதியை களுவாஞ்சிக்குடி சமூக நலன்புரி சங்கம்   நேற்று வைத்தியஅத்தியட்சகர் இரா.முரளீஸ்வரனிடம் வழங்கிவைத்தது.

வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரனின் வேண்டுகோளின்பேரில் லண்டனில் வாழும் களுவாஞ்சிக்குடியைச்சேர்ந்த கண்வைத்தியநிபுணர் டாக்டர் ராதாதர்மரெட்ணத்தின் முயற்சியினால் இவ்வவைத்தியசாலையில் இருதடவைகள் இலவசமாக ஏழைகண்நோயாளர்களுக்கு கண்வில்லை பொருத்தும் வெண்புரைசத்திரசிக்ச்சைகள் பல இலட்ச ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வந்தமை தெரிந்ததே.

Comments

Popular posts from this blog

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது. பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா... என்னோடு நான் அழுகின்றேனா... இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது. சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும் உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம் கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன். என் அழுகைக்கான காரணத்தை அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை... இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான் எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ எனக்கே தெரியாது. அழுகையின் தொடக்கமும் முடிவும் அழுகையாகவே மட்டும் இருக்கிறது. கிடைக்கும் தனிமைகளை எல்லாம் அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன். அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின் மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன். அழாத நாட்கள் என்று ஒன்றமே என்னை கடந்ததாக இல்லை... அழுகையை விட ஒரு நண்பன் இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை... அழுவதற்கென்று குளியல் அறையினையே நான் அதிகம் பயன்படுத்துகின்றேன். யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும் எனக்கு பயமில்லை... எனது அழுகையினை எனது குளியல் ஒருபோதும் காட்டியே க...

ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, முகமது நபி உள்பட மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்தார். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷமிக்கு கிடைத்துள்ளது ஸ்கோர் விபரம்: இந்தியா: 224/8  50 ஓவரகள் விராத் கோஹ்லி: 67 கேதார் ஜாதவ்: 52 கே.எல்.ராகுல்: 30 விஜய் சங்கர்: 29 தோனி: 28 ஆப்கானிஸ்தான்: 213/10  49.5 ஓவர்கள் முகமது நபி: 52 ரஹ்மத் ஷா: 36 குல்பதின் நப்: 27 ஜாட்ரான்: 21 ஆட்டநாயகன்: பும்ரா இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஸ்கோர் விபரம்: நியூசிலாந்து: 291/8  50 ஓவர்கள்

ஏழ்மை கல்விக்கு தடையல்ல - வாழ்வினில் கல்வியினூடாக பல சாதனைகள் செய்திட வாழ்த்துக்கள் சகோதரி!!!

கடந்த வருடம் க.பொ.த சாதரன தர பரீட்சையில் 6 பாடங்களில் அதி உயர் சித்திகளை (6ஏ) பெற்ற #தாண்டியடி விக்ணேஸ்வரா மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தமது குடும்ப சூழல் காரணமாக உயர் தர வகுப்புக்களுக்கான கட்டணங்களை செலுத்துவதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார். கல்வியில் திறமையும் ஆர்வமும் உடைய இம்மாணவிக்கு உதவும் முகமாக பொத்துவில் ஊறணியை சேரந்த சேவியர்_குரேரா பிறின்டன்_குரேரா அவர்கள் ரூ 25,000/- ஐ நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார் (இவர் ஏற்கனவே மர நடுகைக்காக ரூ 5,000/- நன்கொடை வழங்கியிருந்தார் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது)  வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏👏👏 இவருடைய நன்கொடையில் இந்துசமயம்,அரசியல்,தமிழ் ஆகிய பாடங்களுக்கான அடுத்து வரும் 2-3 மாதங்களுக்கான வகுப்பு கட்டணங்களும், நிரந்தர வாழ்வாதார உதவியாக ஒரு கோழிக்கூடு மற்றும் நாட்டுக்கோழிகளும் (10 பேடு, 2 சேவல்) வழங்கப்பட்டன.  இம்மாணவியின் கல்வி அடைவுமட்டங்களை பாடசாலை அதிபர் அவர்களால் நேரடி கண்கானிப்பில் அவதானிக்கபடும் என அதிபர் அவர்களே அக்கறை கொண்டு கூறியது கூடுதல் மகிழ்ச்சி. 👍🏻👌 நன்கொடையாளருக்கும் இதனை சரியாக...