Skip to main content

அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது.


அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று(18) மாலை உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

இந்நினைவேந்தல் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் க.பேரின்பராசா, திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் ஆலய தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட அதிகளவானவர்கள் பங்கேற்றனர்.

ஆலய தலைவர் க.கிருஸ்ணமூர்த்தியின் தலைமையில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ப.கு.கேதீஸ்வரக்குருக்களினால் நடாத்தப்பட்ட பூஜை வழிபாடுகளில் இறந்த உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டிய பூஜை வழிபாடுகள் நடைபெற்றதுடன் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.

நினைவுச்சுடரினை ஏந்திய பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் ஆலயத்தை வலம் வந்ததுடன் ஆலய வெளி வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவு பதாதைக்கு முன்பாக ஒன்றிணைந்து அங்கிருந்த பொதுச்சுடரினையும் எற்றி வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் உரையாற்றும் போது பல்வேறு விடயங்களை குறிப்பிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ….தமிழர் பிரச்சினையை சர்வதேசம் தீர்த்து வைக்கும் என நம்புவதாக கூறினார். நாட்டில் வாழும் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கும் அரசியல் தீர்வு அவசியம்.

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில்…. தந்தை செல்வா சொன்னது போன்று கடவுள்தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும்…..

திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன்… சர்வதேசம் இன்று தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்காது பாராமுகமாக செயற்படுகின்றது….






Comments

Popular posts from this blog

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது. பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா... என்னோடு நான் அழுகின்றேனா... இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது. சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும் உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம் கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன். என் அழுகைக்கான காரணத்தை அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை... இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான் எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ எனக்கே தெரியாது. அழுகையின் தொடக்கமும் முடிவும் அழுகையாகவே மட்டும் இருக்கிறது. கிடைக்கும் தனிமைகளை எல்லாம் அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன். அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின் மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன். அழாத நாட்கள் என்று ஒன்றமே என்னை கடந்ததாக இல்லை... அழுகையை விட ஒரு நண்பன் இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை... அழுவதற்கென்று குளியல் அறையினையே நான் அதிகம் பயன்படுத்துகின்றேன். யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும் எனக்கு பயமில்லை... எனது அழுகையினை எனது குளியல் ஒருபோதும் காட்டியே க...

ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, முகமது நபி உள்பட மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்தார். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷமிக்கு கிடைத்துள்ளது ஸ்கோர் விபரம்: இந்தியா: 224/8  50 ஓவரகள் விராத் கோஹ்லி: 67 கேதார் ஜாதவ்: 52 கே.எல்.ராகுல்: 30 விஜய் சங்கர்: 29 தோனி: 28 ஆப்கானிஸ்தான்: 213/10  49.5 ஓவர்கள் முகமது நபி: 52 ரஹ்மத் ஷா: 36 குல்பதின் நப்: 27 ஜாட்ரான்: 21 ஆட்டநாயகன்: பும்ரா இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஸ்கோர் விபரம்: நியூசிலாந்து: 291/8  50 ஓவர்கள்

ஏழ்மை கல்விக்கு தடையல்ல - வாழ்வினில் கல்வியினூடாக பல சாதனைகள் செய்திட வாழ்த்துக்கள் சகோதரி!!!

கடந்த வருடம் க.பொ.த சாதரன தர பரீட்சையில் 6 பாடங்களில் அதி உயர் சித்திகளை (6ஏ) பெற்ற #தாண்டியடி விக்ணேஸ்வரா மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தமது குடும்ப சூழல் காரணமாக உயர் தர வகுப்புக்களுக்கான கட்டணங்களை செலுத்துவதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார். கல்வியில் திறமையும் ஆர்வமும் உடைய இம்மாணவிக்கு உதவும் முகமாக பொத்துவில் ஊறணியை சேரந்த சேவியர்_குரேரா பிறின்டன்_குரேரா அவர்கள் ரூ 25,000/- ஐ நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார் (இவர் ஏற்கனவே மர நடுகைக்காக ரூ 5,000/- நன்கொடை வழங்கியிருந்தார் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது)  வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏👏👏 இவருடைய நன்கொடையில் இந்துசமயம்,அரசியல்,தமிழ் ஆகிய பாடங்களுக்கான அடுத்து வரும் 2-3 மாதங்களுக்கான வகுப்பு கட்டணங்களும், நிரந்தர வாழ்வாதார உதவியாக ஒரு கோழிக்கூடு மற்றும் நாட்டுக்கோழிகளும் (10 பேடு, 2 சேவல்) வழங்கப்பட்டன.  இம்மாணவியின் கல்வி அடைவுமட்டங்களை பாடசாலை அதிபர் அவர்களால் நேரடி கண்கானிப்பில் அவதானிக்கபடும் என அதிபர் அவர்களே அக்கறை கொண்டு கூறியது கூடுதல் மகிழ்ச்சி. 👍🏻👌 நன்கொடையாளருக்கும் இதனை சரியாக...